ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு! திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 46 பேர் பலி: பிரதமர் மோடி இரங்கல்
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமாக 46 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு
ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட திடீர் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி குறைந்தது 46 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சஷோதி கிராமம் மச்சைல் மாதா புனித யாத்திரை செல்வதற்கான தொடக்க புள்ளியாகும்.
PTI தகவலின் படி, 46 உடல்களை மீட்பு பணியாளர்கள் வெளியே எடுத்துள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது.
இடுபாடுகள் மற்றும் சேறுகளில் இருந்து 167 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர். இவர்களில் 38 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
My thoughts and prayers are with all those affected by the cloudburst and flooding in Kishtwar, Jammu and Kashmir. The situation is being monitored closely. Rescue and relief operations are underway. Every possible assistance will be provided to those in need.
— Narendra Modi (@narendramodi) August 14, 2025
டஜன் கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார், அத்துடன் மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |