ஒரு பழம்... ஓஹோன்னு வாழ்க்கை!.. இத்தனை நோய்கள் தீருமா?
நாவல் பழம் நீரிழிவுக்கான சிறந்த சிகிச்சை உணவாக உள்ளது. இதன் விதைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைப்பதில் உதவுகிறது.
நாவல் மரத்தின் மரப்பட்டை நுரையீரல் கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. அரை டீஸ்பூன் மரப்பட்டை தூள் மற்றும் ஒரு கரண்டி சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்த்தொற்று மற்றும் சிறுநீரகம் செயலிழப்பதை தடுக்க முடியும்.
நாவல் பழம் சாப்பிடுவது புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது. நாவல் பழத்தில் பாலிபினால்களை, பைட்டோகெமிக்கல்கள் நிறைந்துள்ளது. இது புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி அழிக்கிறது.
istock
நாவல் பழத்தில் மருத்துவ குணங்கள் உள்ளன, இந்த பழத்தின் சாறு வாய் துர்நாற்றம் நீங்க உதவுகிறது. நாவல் பழ மரத்தின் பட்டையை எரித்து சாம்பல் ஆக்கி பற்கள் துலக்கினால் பற்கள் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.
சிறுநீரக கற்களால் கஷ்டப்படுபவர்கள், நாவல் பழத்தினை சாப்பிடுவதுடன், அதன் விதையை உலர வைத்து பொடி செய்து, தயிருடன் சேர்த்து சாப்பிட்டால் கற்களானது கரைந்துவிடும்.
நாவல் பழம் இயற்கையாகவே இரத்தத்தை சுத்திகரிக்கப் பயன்படுகிறது. மேலும் இரத்த ஓட்டத்தையும் நிலையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
நாவல் பழம் கண்களுக்கும் நல்ல பயனை தருகிறது. கண் பார்வையைத் தெளிவாக்கும்.
healthifyme