149 பந்தில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள்: போராடி அணியை காப்பாற்றிய வீரர்
நேபாள அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஜென் ஃப்ரைலிங்க் நிதானமாக ஆடி சதம் அடித்தார்.
லௌரேன் ஸ்டீன்கம்ப் அரைசதம்
நேபாளம் மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி உட்ரெச்ட்டில் நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற நேபாள அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. ஆனால் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்க தாமதமானது.
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய நமீபியா அணி, மைதானத்தின் தன்மையால் நிதானமாகவே ஓட்டங்களை சேர்த்தது.
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் மற்றும் லௌரேன் ஸ்டீன்கம்ப் வலுவான கூட்டணி அமைத்தனர்.

அரைசதம் அடித்த லௌரேன் ஸ்டீன்கம்ப் (Louren Steenkamp) 87 பந்துகளில் 1 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 59 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஜென் ஃப்ரைலிங்க் சதம்
அடுத்து வந்த வீரர்கள் கரணின் பந்துவீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேற, ஜென் ஃப்ரைலிங்க் (Jan Frylinck) சதம் அடித்தார்.
அதிரடியாக ஆடக்கூடிய ஃப்ரைலிங்க், வழக்கத்திற்கு மாறாக ஆடுகளத்தின் தன்மை மற்றும் நேபாளத்தின் தாக்குதல் பந்துவீச்சுக்கு ஏற்ப ஆடியதால், 149 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 100 ஓட்டங்கள் குவித்தார்.
அவரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் நமீபியா அணி 211 ஓட்டங்கள் சேர்த்தது. நேபாளத்தின் கரண் கேசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒருநாள் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |