ஜனநாயகன் மீண்டும் தள்ளிப்போகிறது - தீர்ப்பை அறிவித்த உயர்நீதிமன்றம்
ஜனநாயகன் படம் தொடர்பான மேல்முறையீடு வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனநாயகன் தணிக்கை சான்றிதழ்
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவான ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மறுதணிக்கை செய்ய உள்ளதாக தணிக்கை வாரியம் தெரிவித்த நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால், பட வெளியீட்டை ஒத்திவைப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சான்றிதழ் வழங்கக்கோரி தனி நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது.
வெளியான தீர்ப்பு
மேல்முறையீடு மனு மீதான விசாரணையில், ஜனவரி 20 ஆம் திகதி வாதங்கள் நிறுவைடைந்த நிலையில், தீர்ப்பு திகதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.

இன்று தீர்ப்பை வெளியிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சவா, “ஜனநாயகன் பட வழக்கில் தணிக்கை வாரியம் தரப்புக்கு முறையான நேரம் வழங்கி தனி நீதிபதி விசாரிக்கவில்லை எனக்கூறி ஜனநாயகன் படத்திற்கு சென்சார் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்துள்ளார்.
மேலும், மீண்டும் தனி நீதிபதி அமர்வில் முதலில் இருந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
இதனால், ஜனநாயகன் வெளியாவதில் மீண்டும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |