ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி வழங்கிய முதல்வர் விஜய்
ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட நாராயணாவிற்கு தமிழக அரசுப்பதவி வழங்கப்பட்டுள்ளது.
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசுப்பதவி
விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், KVN புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி 9 ஆம் திகதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
ஆனால், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், தற்போது விஜய் முதலமைச்சரான பின்னரும் படம் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஜன நாயகன் திரைப்பட தயாரிப்பாளரான வெங்கட நாராயணா தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்ற அரசு பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் இருந்துகொண்டு தமிழக அரசின் முக்கியக் கோரிக்கைகளை மத்திய அரசிடம் கொண்டு சேர்ப்பதும், மாநிலத்திற்கான நிதி மற்றும் திட்டங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று தருவதே இந்த பதவியின் முக்கிய பொறுப்பாகும். இது அமைச்சருக்கு நிகரான பதவியாக கருதப்படுகிறது.

விஜய் ஆட்சியமைக்க உரிமைகோரி ஆளுநரை சந்தித்த போதும் KVN நிறுவனத்தின் உரிமையாளர் கே.வெங்கட நாராயணா உடன் இருந்தார்.
வெங்கட நாராயணா பின்னணி
கே.வெங்கட நாராயணா பட்டயக் கணக்காளர், நிறுவனச் செயலாளர், செலவு மற்றும் மேலாண்மைக் கணக்காளர் மற்றும் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டதாரி ஆவார்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னனி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prestige நிறுவனத்தில் பணியாற்றி, அதன் CEO ஆக 8 ஆண்டுகள் இருந்துள்ளார்.
2020 ஆம் ஆண்டில் பெங்களூருவை தளமாக கொண்டு, கேவிஎன் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தை நிறுவிய இவர், பல மொழிகளில் முக்கிய திரைப்பிரபலங்களை வைத்து 8க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் கேவிஎன் பிராப்பர்டீஸ் (KVN Properties) என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழ் ஓரளவு தெரியும் எனவும், தெலுங்கு தாய்மொழி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |