மரணமே கூடாது! சாகா வரத்திற்காக பல கோடிகளை கொட்டும் கோடீஸ்வரர்? வெளி வரும் முக்கிய தகவல்
உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான அமேசான் நிறுவனர், சாகா வரம் பெறுவதற்கான முயற்சியில் கோடிகளை இறைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாகா வரம் பெறுவதற்கு உலகின் பல்வேறு நாடுகளில் தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன. மன்னர்கள் ஆண்ட காலக்கட்டத்தில், தாங்கள் மரணம் அடையக் கூடாது என்பதற்காக, பல சாகா வர பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டதுண்டு.
ஆனால், இதுவரை மனிதகுலம் சாகா வரம் என்ற இலக்கை அடையவே இல்லை என்பது தான் உண்மை. இந்த சாகா வரத்திற்காக இப்போது வரையிலும், பல நாடுகளில் கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது அந்த ஆராய்ச்சியில் தான், உலக கோடீஸ்வரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான Jeff Bezos இறங்கியுள்ளார். இதற்காக அவர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆராய்ச்சி நிறுவனமான அட்லாஸ் லேப்ஸில் பல கோடிகளை முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் இதில் அவரின் முதலீடு எவ்வளவு என்பது வெளியாகாமல் இருந்தாலும், இந்த நிறுவனத்தின் மதிப்பில் பாதிக்கு மேல், அவர் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனம் தற்போது மனித குலத்திற்கு சாகா வரம் அளிக்கும் ஆராய்ச்சியை செய்து கொண்டு இருக்கிறது.
மனிதர்கள் சாகாமல் எப்போதும் இளமையாகவே இருக்க வைப்பதற்கான ஆராய்ச்சிகளை இந்த நிறுவனம் மேற்கொண்டு வ் அருகிறது. பொதுவாக மனிதர்களுக்கு உடலில் இருக்கும் செல்கள் வளர்ந்து அது பெரிதாகி பல பிரிவுகளாக பிரிந்து அந்த செல்களும் வளர்ந்து பின் அது செயல் இழந்து இறந்து மடியும்.
இது சுழற்சி முறையில் உடலில் நடந்து கொண்டே இருக்கும். இந்த சுழற்சி முறை நடக்க நடக்க உடலில் மாற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இது உடலில் வயதை அதிகரிக்கும். செல்கள் வயதாகி இறப்பதன் காரணமாகவே, நமக்கு முதிர்ச்சி ஏற்படுகிறது.
ஒருவேளை இந்த செல்களை வயதாக விடாமல், இளைமையாகவே வைத்து இருந்தால் எப்படி இருக்கும்.
அதோடு முதிர்ந்த செல்களை மீண்டும் அதன் தொடக்க நிலையான எம்பிரியோ நிலைக்கு கொண்டு சென்றால் எப்படி இருக்கும். முதிர்ந்த செல்களை ஊக்கம் கொடுத்து மீண்டும் அதன் தொடக்க நிலைக்கு கொண்டு சென்றால் ஒரு நாமும் இளமையாக மாறிவிடுவோம்.
இது பார்ப்பதற்கு மிகவும் எளிதானது என்றாலும், இதை சாதிப்பது என்பது அவ்வளவு எளிது கிடையாது. முதலில் விலங்குகளில் இருக்கும் செல்களை இதுபோல புதுப்பித்து மீண்டும் உயிர்பெற வைக்கும் ஆராய்ச்சிகளை செய்ய வேண்டும்.
அதில் ஏதும் பின்விளைவுகள் ஏதும் இல்லை என்றால் மட்டுமே நாம் அதை மனித உடல்களில் செயல்படுத்த முடியும்.
இந்த ஆராய்ச்சியை தான் தற்போது அட்லாஸ் லேப் நிறுவனம் செய்கிறது. ஏற்கனவே யூனிட்டி டெக்னலாஜி என்ற நிறுவனத்தில் இதேபோல் Jeff Bezos சாகா வரம் குறித்த ஆராய்ச்சிக்கு முதலீடு செய்துள்ளார்.
அந்த ஆராய்ச்சியும் தனியாக நடந்து கொண்டு வருகிறது.
உலக கோடீஸ்வர்களுக்கான வரிசையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட தகவலின் படி Jeff Bezos 193.8 பில்லியன் அமெரிக்க டொலருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.