சிறையில் சாகும் முன் எப்ஸ்டீன் எழுதிய குறிப்பு., எழுந்துள்ள புதிய சர்ச்சை
ஜெஃப்ரி எப்ஸ்டீன் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்க நிதியாளர் மற்றும் பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் 2019-ஆம் ஆண்டு நியூயார்க் சிறையில் உயிரிழந்தார்.
அவரது மரணம் தற்கொலையா அல்லது வேறு காரணமா என்ற கேள்வி உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
இப்போது, 7 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதியதாகக் கூறப்படும் தற்கொலைக் குறிப்பு நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குறிப்பு 2019 ஜூலை மாதம் எப்ஸ்டீன் முதல் முறையாக தற்கொலை முயற்சி செய்தபோது, அவரது சிறையில் இருந்து மற்றோரு கைதி நிக்கோலஸ் டார்டாக்லியோன் (Nicholas Tartaglione) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அக்குறிப்பில், "அவர்கள் பல மாதங்களாக என்னை விசாரித்தார்கள், ஆனால் எதுவும் கண்டுபிடிக்கவில்லை!!!" என்று அவர் எழுதியுள்ளார்.
மேலும், தான் விடைகொடுக்கும் நேரத்தை முடிவு செய்வது மகிழ்ச்சி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குறிப்பு எப்ஸ்டீனின் மனநிலையை வெளிப்படுத்துகிறது. ஆனால், இதில் கையொப்பம் இல்லை என்பதால் அதன் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் நிலவுகிறது.
நீதிபதி கென்னத் கராஸ் இந்தக் குறிப்பை வெளியிட உத்தரவிட்டார். The New York Times உள்ளிட்ட ஊடகங்கள் இதை வெளியிட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
எப்ஸ்டீனின் மரணம் தொடர்பான விசாரணைகள், சிறை பாதுகாப்பு குறைபாடுகள், மற்றும் அவரது தொடர்புகள் குறித்து இன்னும் பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இந்தக் குறிப்பு வெளியானதால், அவரது மரணம் குறித்த சர்ச்சைகள் மீண்டும் தீவிரமாகியுள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
#JeffreyEpstein #SuicideNote #USNews #CourtRelease #EpsteinCase #BreakingNews #GuardianNews