பிரித்தானியாவில் பணி செய்ய விருப்பமா? இந்த ஐந்து துறைகளில் ஏராளம் வேலைவாய்ப்புகள் உள்ளன...
பிரித்தானியாவில் தற்போது கடுமையான பணியாளர் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக, ஐந்து துறைகளில் வேலைவாய்ப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. தகுதியுடையோர் முறைப்படி விண்ணப்பித்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.
1. மருத்துவத்துறை மருத்துவத்துறையில், செவிலியர்கள், பார்மஸி பணியாளர்கள், வீட்டிற்கே சென்று நோயாளிகளைக் கவனித்துக்கொள்வோர் முதலான பணியிடங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன.
2. பொறியியல் துறை பொறியியலில், சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்கல், மற்றும் design and development பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளன.
3. தகவல் தொழில்நுட்பத்துறை
பிரித்தானியாவில், தகவல் தொழில்நுட்பத்துறையில் பெருமளவில் பணியாளர் தேவை காணப்படுகிறது. Business analysts, architects, மற்றும் systems designers ஆகிய பணியாளர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது.
4. Programming and Software Development இந்த துறையில், 2027 வாக்கில் 4.2% பணி வளர்ச்ச்சி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், 12,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக உள்ளன.
அதே காலகட்டத்தில், ஏராளமானோர் பணி ஓய்வும் பெற உள்ளதால், ஏராளம் பணியிடங்கள் காலியாக உள்ளன என்கிறார்கள் நிபுணர்கள்.
5. பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் காப்பீடு, நிதி, அரசுத்துறை முதலான துறைகளில், Actuaries, பொருளாதார வல்லுநர்கள் மற்றும் புள்ளியியல் துறையினர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.
2027வாக்கில், இந்த துறைகளில் 23,200 வேலைவாய்ப்புகள் உருவாகும் என தேசிய தொழில்கள் சேவை அமைப்பு கணித்துள்ளது.
இதில் கவனிக்கவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால், முறைப்படி பணிகளுக்கு விண்ணப்பித்து, பணி வழங்குபவரிடமிருந்து பணி ஆஃபரைப் பெற்றபின் பணிக்கு செல்வது நல்லது. இப்போதெல்லாம், ஒரு குறிப்பிட்ட அளவு பெரிய தொகையை ஊதியமாக பெறும் பணியாளர்களுக்கே விசாக்கள் வழங்கப்படுகின்றன என்பதால், அவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயல்படுவது நல்லது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |