அடுத்த ஐபிஎல் ஏலத்திற்கு வரும் மிக முக்கிய வீரர்! கடும் போட்டிக்கு வாய்ப்பு: யார் அவர் தெரியுமா?
இந்தியாவில் வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்கான அடுத்த ஏலத்தில், இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடர், முடிந்த பின்பு மிகப் பெரிய ஏலம் நடைபெறவுள்ளது.
ஏனெனில் அடுத்த ஆண்டு இரண்டு புதிய அணிகள், வீரர்களுக்கான ஏலம் என களைகட்ட உள்ளது. இதில் ஒரு அணிகள் இரண்டு இந்திய வீரர்கள், இரண்டு வெளிநாட்டு வீரர்களை தவிர மற்ற வீரர்களை ஏலத்தில் விட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில், அடுத்த ஐபிஎல் ஏலத்தில், இங்கிலாந்து அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜோ ரூட் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் ஜோ ரூட் கலந்து கொள்ளவுள்ளார். இந்த ஆண்டின் துவக்கத்தில் இங்கிலாந்திற்கு இந்தியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது கூட, செய்தியாளர்கள் சந்திப்பில், ரூட் ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்கான தனது விருப்பத்தைப் பற்றி பேசினார்.
அதில், நான் ஒரு ஐபிஎல் சீசனிலாவது கலந்து கொள்ள விரும்புகிறேன் என்று கூறியிருந்தார். தற்போது அவர் ஏலத்தில் கலந்து கொள்ளவிருப்பது உறுதியாகியுள்ளதால், ஒரு தரமான கேப்டனை தேடும் அணிகளுக்கு ரூட் ஒரு தகுதியான வீரராக இருப்பார்.
ஏனெனில் இவர் இங்கிலாந்து அணிக்கு பல முறை கேப்டனாக இருந்துள்ளார். தற்போது இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு கேப்டனாக உள்ளார். நிறைய அனுபவம் இருக்கிறது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொண்டிருந்தார். ஆனால் அவரை அப்போது எந்த அணியும் எடுக்கவில்லை.
ஆனால், அப்போது இருந்த ஜோ ரூட்டிற்கும், இப்போது இருக்கும் ரூட்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.