இந்திய அணியை 5-0 என்று வீழ்த்தி... அந்த வரலாற்று தொடருக்கு தயாராவோம்! ஜோ ரூட் விடுத்த சவால்
இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன, ஜோ ரூட் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றுவோம் என்று கூறியுள்ளார்.
உலகக்கோப்பை டெஸ்ட் தொடருக்கான இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, இந்திய அணி, இங்கிலாந்து சென்றுள்ளது. இந்த இறுதிப் போட்டி வரும் 18-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்ந தொடர் முடிந்த பின்பு, இந்திய அணி, அப்படியே இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
இந்நிலையில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆன ஜோ ரூட், இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகள் அனைத்தையும் வெற்றி பெற்று ஆஷஸ் தொடருக்கு எங்களை தாயார்படுத்திக் கொள்வோம்.
இந்த கோடைக்காலம் முழுவதும் ஆஷஸ் டெஸ்ட் தொடருக்கான பேச்சு வார்த்தைகளே அதிகமாக நடக்கப்போகிறது. ஒரு இங்கிலாந்து பிரஜையாகவும் மற்றும் இங்கிலாந்து அணியின் கேட்னாகவும் அந்த தொடரை கைப்பற்றுவதில் எனக்கு பேரரார்வம் இருக்கிறது.
ஆஷஸ் தொடருக்கு இன்னும் நிறைய நாட்கள் இருப்பதால் அதற்கான திட்டமிடல் இப்போதிலிருந்தே தொடங்கப்படும். ஆனால் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டு அந்த ஐந்து போட்டிகளிலும் வெற்றி பெறுவதே ஆஷஸ் தொடருக்கு தயாராவதற்கான சிறந்த முறையாக இருக்கும்.
ஏனெனில் வலுவான இந்திய அணியை ஜெயிக்கும் போது, அது மனரீதியாக நமக்கும் மேலும் நம்பிக்கையை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.