ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியால் நரம்பு கோளாறு! ஒப்புதல் விண்ணப்பத்தை திரும்பி பெற்றதால் பரபரப்பு..
கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கக்கோரி கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் மீண்டும் பெற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
உலகில் கொரோனாவை கட்டுக்குள் வைக்க பல முன்னணி நிறுவங்கள் தடுப்பூசி தயாரிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றது.
இதைத்தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் தாங்கள் தயாரித்த தடுப்பூசிகளுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க கோரி விண்ணப்பத்தை தாக்கல் செய்தது.
ஆனால் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி செலுத்தி கொண்ட சிலருக்கு நரம்பு கோளாறு, ரத்த உறைவு போன்ற பக்கவிளைவுகள் ஏற்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசிக்காக தாக்கல் செய்யப்பட்ட ஒப்புதல் விண்ணப்பத்தை திருப்பி பெற்று கொண்டதாக தெரிவித்துள்ளது.