ஆறு பெண்களுக்கு இரத்தக்கட்டிகள்... ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை நிறுத்த முடிவு
அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு பெண்களுக்கு அபூர்வ இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தடுப்பூசியை நிறுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி போட்டுக்கொண்ட ஆறு பெண்களுக்கு அபூர்வ இரத்தக்கட்டிகள் உருவாகியுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பும், அமெரிக்க நோய்த்தடுப்பு மையங்களும் அந்த தடுப்பூசியை பயன்படுத்துவதை நிறுத்த அழைப்பு விடுத்துள்ளன.
அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, மற்றும் அமெரிக்க நோய்த்தடுப்பு மையம் ஆகிய பெடரல் அமைப்புகள் இரண்டுமே, ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்த முடிவு செய்துள்ளதுடன், மாகாணங்களும் தங்களைப் பின்தொடர்ந்து ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி பயன்பாட்டை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளன.
அமெரிக்காவில் இதுவரை ஏழு மில்லியன் மக்கள் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்கள்.
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இரத்தக்கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் 18 முதல் 48 வயது வரையுடையவர்கள் என்பதும், அவர்கள் அனைவருமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.