ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி யாருக்கெல்லாம்?: ஜேர்மனி எடுத்துள்ள முடிவு
ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியை, வயது வந்த அனைவருக்கும் பயன்படுத்துவது என ஜேர்மனி முடிவு செய்துள்ளது.
ஆகவே, வரும் நாட்களில், பல மில்லியன் ஜேர்மானியர்களுக்கு ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி போடப்பட உள்ளது.
பெடரல் சுகாதாரத்துறை அமைச்சரான Jens Spahn கூறும்போது, இந்த முடிவு ஜேர்மனியில் வேகமாக தடுப்பூசி போடுவதை நிதர்சனமாக்கும் என்றார்.
இதுவரை 450,000 டோஸ் தடுப்பூசி ஜேர்மனிக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்று கூறிய Spahn, வரும் மாதங்களில், குறிப்பாக ஜூலை மாத இறுதியில், 10 மில்லியன் டோஸ் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசி ஜேர்மனியை வந்ததடைய உள்ளது என்றார்.
இதற்கிடையில், ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியைப் பொருத்தவரை, அந்த
தடுப்பூசிக்கு மட்டுமே ஒரே டோஸ் மட்டும் போட்டால் போதும் என்ற நிலை உள்ளதால்,
அதை இரண்டு அப்பாயிண்ட்மெண்ட்கள் பெறுவதற்கு கஷ்டப்படும் நிலையில் உள்ள
அகதிகள் மற்றும் வீடற்றவர்களுக்காக ஒதுக்கி வைக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட
துறைகளின் அதிகாரிகள் கோரியுள்ளார்கள்.