வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு பெருகும் ஆதரவு - பத்திரிக்கையாளர் ராஜகோபாலன்
journalist delhi raja gopal about cm vijay: முதல்வர் விஜய்க்கு வட மாநிலங்களில் உள்ள ஆதரவு குறித்து பத்திரிக்கையாளர் ராஜகோபாலன் பேசியுள்ளார்.
வட மாநிலங்களில் முதல்வர் விஜய்க்கு ஆதரவு
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், 2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பேசி வருகின்றனர்.
ஆனால் இதற்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் அதனை தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை துறப்போம் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், முதல்வர் விஜய்யின் பிரித்தானியா பயணம், தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட உள்ள சட்டப்பேரவை, முதல்வர் விஜய் பிரதமர் வேட்பாளர் ஆவது உள்ளிட்டவை குறித்து மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபால் பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
இதில் பேசிய அவர், கிண்டி மற்றும் நந்தனத்திற்கு இடைப்பட்ட பகுதியில் புதிய சட்டமன்ற கட்ட திட்டமிட்டுள்ளார். விரைவில் இது குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிடுவார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய சட்டமன்ற கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டப்படும். ஜனாதிபதி இதில் கலந்துகொள்வார்.
500க்கும் மேற்பட்ட இருக்கைகளுடன், இந்தியாவிலே சிறந்ததாக அதிநவீன வசதியில் இந்த சட்டமன்றம் அமைய உள்ளது. 2029 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் சட்டமன்றம், இந்த கட்டிடத்திற்கு மாற்றப்படும்.
இதே போல், வரும் செப்டம்பர் 10 ஆம் திகதி முதல்வர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்க்க பிரித்தானியாவிற்கு செல்ல உள்ள நிலையில், அங்கு சுமார் 10,000 பிரித்தானியா வாழ் தமிழர்களை சந்தித்து பேச உள்ளார்.
முதல்வர் விஜய் ஆட்சி மீது வடமாநில மக்களுக்கும் நல்ல மதிப்பு உள்ளது. அது Paid promotion இல்லை. அவரை ஒரு மாற்றாக பார்க்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகும். தவெக மற்றும் காங்கிரஸ் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.
முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னெடுப்பதை டெல்லி காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை. ராகுல் காந்தி மற்றும் முதல்வர் விஜய் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவலுக்கு வீடியோவை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |