பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவரவேண்டும்: நீதிபதி உத்தரவு
பிரித்தானியா வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பிய புலம்பெயர்ந்தோர் ஒருவரை திரும்ப அழைத்துவர நீதிபதி உத்தரவு.
பிரித்தானியாவும் பிரான்சும் செய்துகொண்ட ’one in one out’ ஒப்பந்தத்தின்கீழ் பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட புலம்பெயர்ந்தோர் வழக்கில், நீதிபதி அவருக்கு சாதகமாகவும், உள்துறை அலுவலகத்தில் முடிவுக்கு எதிராகவும் தீர்ப்பளித்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
புலம்பெயர்ந்தோரை திரும்ப அழைத்துவர உத்தரவு
சிறுபடகு மூலம் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவரான சூடானைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோர் ஒருவரை, 2025ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 27ஆம் திகதி, One in one out ஒப்பந்தத்தின் கீழ் பிரான்சுக்கு வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பியது பிரித்தானிய உள்துறை அலுவலகம்.

ஆனால், உயர்நீதிமன்ற நீதிபதியான Mr Justice Sheldon என்பவர், அந்த புலம்பெயர்ந்தோரை மீண்டும் பிரித்தானியாவுக்கு அழைத்துவர பிரித்தானிய உள்துறை அலுவலகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.
புகலிடம் கோருவோரின் கோரிக்கைகள் ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்ட பிறகு, அவற்றை மறுபரிசீலனை செய்யக் கோரும் உரிமையை மறுக்கும் உள்துறை அமைச்சகத்தின் கொள்கை மாற்றத்தை ரத்து செய்துள்ள நீதிபதி, அப்படி ஒரு விடயம் நடக்கவே இல்லை என்பது போலாகும் வகையில் தான் அதை ரத்து செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட புலம்பெயர்ந்தோர், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர், மற்றும் சித்திரவதைக்கு உள்ளானவர் என்பதற்கு ஆதாரங்கள் இருப்பது தெரியவந்துள்ளதையடுத்து நீதிபதி இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார்.
விடயம் என்னவென்றால், இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, இதேபோல வலுக்கட்டாயமாக பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்ட பலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரக்கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |