தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்தால் மருத்துவமனை வேலை போய்விடும்... தீர்ப்பளித்துள்ள அமெரிக்க நீதிபதி
தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள், அல்லது மருத்துவமனை வேலையை விட்டுவிட்டு வேறு வேலைக்கு போங்கள் என வழக்கு ஒன்றில் தீர்ப்பளிக்கும்போது குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க நீதிபதி ஒருவர்.
Houston மருத்துவமனை குழுமத்தில் பணி புரியும் ஊழியர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்து, அவர்களில் 178 பேரை ஊதியம் இல்லாத இடைநீக்கம் செய்தது மருத்துவமனை நிர்வாகம்.
அவர்களில் 117 பேர் அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள். வழக்கு தொடர்ந்தவர்களில் ஒருவரான செவிலியர் Jennifer Bridges என்பவர், தடுப்பூசிகள் ஆபத்தானவை, அவற்றை நம் மீது பரிசோதித்துப் பார்ப்பதற்காக பயன்படுத்துகிறார்கள் என்று கூறியிருந்தார்.
அதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிபதியான Lynn Hughes, Jenniferக்கு தடுப்பூசி
போட்டுக்கொள விருப்பம் இல்லையென்றால் போட்டுக்கொள்ளவேண்டாம், ஆனால், அவர் வேறு
எங்காவது வேலைக்குப் போகலாம் என்று கூறிவிட்டார்.
அத்துடன், தடுப்பூசி போடுவதை, நாஸி முகாம்களில் மருத்துவ கண்டுபிடிப்புகளை சோதனை செய்வதற்காக கைதிகளுக்கு மருந்துகள் செலுத்தப்பட்டதற்கு ஒப்பிட்டிருந்தார் Jennifer. அவரது கருத்து கண்டனத்துக்குரியது என்று விமர்சித்த நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.