நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் பானம்..தினமும் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே போதும்!
பொதுவாக இந்தகாலக்கட்டத்தில் நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது ஒரு கடினமான வேலையாக தோன்றலாம், ஆனால் நமது அன்றாட வாழ்க்கை முறையில் சிறிய மாற்றங்கள் செய்தால் மிகவும் எளிதாக நோய் எதிர்ப்பு சக்தியை நாம் அதிகரிக்க முடியும்.
ஆயுர்வேதத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பானங்கள் மற்றும் உணவுகள் உள்ளன.
அத்தகைய சுலபமாக கிடைக்கும் பானங்களில் ஒன்று தான் தக்காளி ஜூஸ். இதனை எளிய முறையில் வீட்டில் தயாரித்து குடித்து வந்தால் இயற்கைமுறையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.தற்போது இதனை எப்படி தயாரிக்கலாம் என்பதை இங்கே பார்ப்போம்
தேவையான பொருட்கள்
- தண்ணீர் - 1 கப்
- உப்பு - தேவையான அளவு
- தக்காளி - 2
செய்முறை
முதலில் தக்காளி பழத்தை எடுத்து நன்கு கழுவி கொள்ளுங்கள். பின்னர் அதனை சிறிய துண்டுகளாக வெட்டி ஜூஸர் ஜாடியில் போட்டு அதனுடன் ஒரு கப் தண்ணீரைச் சேர்த்து 4-5 நிமிடங்கள் அரைக்கவும்.
இந்த சாறை ஒரு கோப்பைக்கு மாற்றி இதனுடன் சிறிது உப்பு சேர்த்து கலந்து பருகவும். தேவைப்பட்டால் தேன் சேர்த்து கொள்ளலாம்.
இந்த ஜூஸை தினமும் வெறும் வயிற்றில் குடித்து வர உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே பருவகால நோய்களை தவிர்க்க தினமும் குடித்து வாருங்கள்.
வேறு நன்மைகள்
- ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு மெலிவு நோய், நுரையீரல், மார்பகம் மற்றும் ப்ரோஸ்டேட் (Prostate) புற்றுநோய் ஆகியவை வராமல் காப்பதற்கும் தக்காளி ஜூஸ் உதவுகிறது.
- மேலும் பசியைத் துண்டும் ஹார்மோன்களின் செயல்பாடுகளை தக்காளி கட்டுப்படுத்துகிறது. இதனால் அதிக அளவு சாப்பிடுவது தடுக்கப்பட்டு உடல் எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் இருக்கிறது.
- தக்காளியை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி சரும பொலிவும் மேம்படும். இதனால் உங்கள் சருமம் எப்போதும் இளமையாக காட்சியளிக்கும்.