சீரழிக்கப்பட்டு 36 முறை குத்தி கொலை செய்யப்பட சிறுமி; 50 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட குற்றவாளி!
அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட வழக்கில், தற்போது பொலிஸார் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
அமெரிக்காவின் Illinois மாகாணத்தில் உள்ள சிகாகோ நகரத்திலிருந்து மேற்கே சுமார் 30 மைல் தொலைவில் உள்ள Naperville பகுதியில் 1972-ஆம் ஆண்டு ஜூலை 7-ஆம் திகதி இந்த சம்பவம் நடந்தது.
சம்பவம் நடந்த அன்று, பாதிக்கப்பட்ட சிறுமி Julie Ann Hanson (15 வயது), தனது சகோதரர் ஒருவரிடமிருந்து சைக்கிளை கடன் வாங்கிக்கொண்டு பேஸ்பால் விளையாட சென்றுள்ளார். ஆனால் அவர் அன்று திரும்ப வரவே இல்லை. மறுநாள் அவரை Naperville பகுதியில் உள்ள ஒரு சோளக்கொல்லையில் இரத்த வெள்ளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.
அவர் கற்பழிக்கப்பட்டு, உடல் முழுவதும் பல இடங்களில் 36 முறை கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டிருந்தார் என Chicago Sun-Times-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போதைய Naperville பொலிஸார் இந்த சம்பவத்தை வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வந்தனர்.
அச்சமயத்தில் இதுபோன்று பல இளம் பெண்கள் கடத்தப்பட்டு, சீரழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர். இதுபோன்ற பல வழக்குகள் முடிக்கப்படாமலே இருந்து வருகின்றன.
அதேபோல் ஜூலி வழக்கிலும் பல ஆண்டுகளாக யார் குற்றவாளி என கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. ஆனால், தற்போதைய Naperville பொலிஸார் இந்த வழக்கில் குற்றவாளியை கைது செய்துள்ளனர்.
ஜூலியின் வீட்டிலுருந்து சுமார் ஒரு மைல் தூரத்தில் வசிக்கும் 76 வயதாகும் Barry Lee Whelpley எனும் ஓய்வுபெற்ற வெல்டிங் தொழிலாளியை கைது செய்துள்ளனர். அவர் தான் இந்த குற்றத்தை செய்தவர் என DNA சோதனையின் மூலம் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். குற்றத்தைச் செய்யும் நேரத்தில் Whelpley-ன் வயது 27.
இந்நிலையில், Barry Lee Whelpley கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் ஜாமினில் வெளிவர 10 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேன்மைக்கும் இந்த வழக்குக்கான தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.