ஜூன் 1ம் திகதி முதல் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்
இந்தியாவில் ஜூன் 1 முதல் அமுலுக்கு வரவுள்ள முக்கிய மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
ஒவ்வொரு மாதமும் காஸ் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கும் என்பது நாம் அறிந்த ஒன்றே, இதன்படி வருகிற 1ம் திகதியும் மாற்றம் இருக்கலாம், வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் மற்றும் வீட்டு உபயோக சிலிண்டருக்கான விலையில் மாற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
EPFO ல் இருந்து பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டு, ஏடிஎம் மூலமே நேரடியாக பணத்தை எடுக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.
கிரெடிட் கார்டு பயன்படுத்தி கொண்டிருப்பவர்களுக்கான முக்கிய தகவல் இதுதான், Auto Debit மூலம் பணம் செலுத்தி வருகிறீர்கள் என வைத்துக்கொள்வோம், ஒருவேளை அதில் தோல்வி ஏதேனும் இருப்பின் 2 சதவிகிதம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும், இந்த மாற்றமும் 1ம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
ATM ல் அடிக்கடி பணம் எடுப்பவர்களுக்காக புதிய கட்டுப்பாடுகள் வரவுள்ளன, குறிப்பிட்ட கால அளவுகளில் மட்டுமே பணத்தை எடுக்க முடியும், அது மீறும் பட்சத்தில் பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்கப்படும்.
இதேபோன்று ஆதார் அட்டையில் மாற்றம் செய்வதற்கு ஜூன் 14ம் திகதி வரை இலவசமாக செய்து கொள்ளலாம், அதன்பின்னர் ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.