பிரித்தானியா கடற்கரையில் பிணமாக மிதந்த இளம் பெண் மருத்துவர்! வெளியான முக்கிய தகவல்
நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் மகிழ்ச்சியாக விளையாடி கொண்டிருந்த பெண் மருத்துவர் கடற்கரையில் சடலமாக கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் மாகேட் பகுதியில் இருக்கும் கடற்கரைக்கு திருஷிக்கா(26) என்ற இளம் பெண் தன் பெண் தோழிகளுடன் சென்றுள்ளார். அங்கிருக்கும் குளத்தில் இவர் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.
அதன் பின் பெண் தோழிகள் திரும்பிய நிலையில், அவர் ஹோட்டலில் இல்லை. இதனால் அவரை பல இடங்ளில் தேடியுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில், கடற்கரையில் கடந்த 11-ஆம் திகதி அதிகாலை 5.45 மணிக்கு கிருஷிக்கா பிணமாக மிதந்துள்ளார்.
கிருஷிக்கா குயின் எலிசபெத் மருத்துவமனையில் தனது சகோதரியுடன் மருத்துவராக பணியாற்றி வருகிறார். இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர் என்று கூறப்படுகிறது. அவரது அப்பாவும் ஒரு சிறந்த மருத்துவர் ஆவார்.
இவரது மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவில்லை. சடலத்தை கைப்பற்றிய பொலிசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.