முந்திரி தோப்பில் நடந்த ஆணவப்படுகொலை! தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு: சீமான் வரவேற்பு

TamilNadu Kadaloor Kannaki Murugesan
By Kaviarasan Sep 24, 2021 12:22 PM GMT
Report

தமிழகத்தில் சுமார் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆணவக் கொலைக்கு நீதிமன்றம் ஒருவருக்கு மரண தண்டனையும், 12 பேருக்கு ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீர்ப்பை வரவேற்பதாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே குப்பநத்தம் புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில், கடந்த 2003-ஆம் ஆண்டு வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கண்ணகி, முருகேசன் ஆகியோர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கிராமத்தினர் ஒதுக்கி வைத்தனர். இதையடுத்து ஊரை விட்டு வெளியேறிய அவர்கள், நண்பர்களின் உதவியுடன் வேறு ஒரு ஊரில் வசித்து வந்துள்ளனர்.

முந்திரி தோப்பில் நடந்த ஆணவப்படுகொலை! தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு: சீமான் வரவேற்பு | Kadaloor Caste Honour Kannaki Murugesan Excecute

இவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த கண்ணகியின் பெற்றோர், அவர்களிடம் சமாதானம் பேசுவது போல், புதுக்கூரைப் பேட்டைக்கு அழைத்து வந்துள்ளனர். அதன், பின்னர் இருவரையும் முந்திரி தோப்பில் விஷம் வைத்து கொடுத்து கொன்றதுடன், அவர்களின் உடல்களையும் எரித்தனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

இந்த சம்பவம் தொடர்பாக, கண்ணகியின் தந்தை துரைசாமி, அவர் மகன் மருதுபாண்டியன், ரங்கசாமி, அய்யாசாமி, கந்தவேலு, ஜோதி, வெங்கடேசன், மணி, குணசேகரன், தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், சின்னதுரை, உதவி ஆய்வாளர் தமிழ்மாறன், ஓய்வுபெற்ற டிஎஸ்பி செல்லமுத்து ஆகிய 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2004-ஆம் ஆண்டு குறித்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. சுமார் 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் இறுதி விசாரணை, கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

முந்திரி தோப்பில் நடந்த ஆணவப்படுகொலை! தூக்கு தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பு: சீமான் வரவேற்பு | Kadaloor Caste Honour Kannaki Murugesan Excecute

இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, உத்தமராஜா தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில், கண்ணகி தம்பதியினர் ஆணவக் கொலையை கடுமையாக கண்டித்துடன், இது ஒரு காட்டுமிராண்டித்தனமான கொலை கடுமையான கூறினார்.

மேலும், குற்றவாளிகள், ஆணவத்துடனும் அச்சமற்ற தன்மையுடனும் குற்றங்களை செய்துள்ளனர். இந்த கொலையைக் கண்டு மற்றவர்கள் அச்சமடையவேண்டும் என்ற எண்ணத்திலேயே, அவர்கள் ஆணவக்கொலை செய்துள்ளனர்.

இந்த கொடுமையான கொலை வழக்கில், கொலை செய்யப்பட்ட கண்ணகியின் சகோதரர் மருதுபாண்டியனுக்குத் தூக்கு தண்டனை விதிப்பதாககவும், குற்றவாளி ஏககாலத்தில் தண்டனை அனுப விக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும், கண்ணகி எரித்ததாகத் தான் தமிழ் மண்ணின் வரலாறு உள்ளது எனவும், தற்போதைய சாதி ஆணவக்கொலை கண்ணகியால் எரிக்கப் பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த வழக்கில் தொடர்புடைய, 12 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், இந்த வழக்கு தொடர்புடைய அப்போதைய விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் செல்ல முத்து மற்றும் உதவி ஆய்வாளர் தமிழ்மாறன் ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.


இதையடுத்து இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், முருகேசன் - கண்ணகி வழக்கின் தீர்ப்பை உளமாற வரவேற்கிறேன். மனிதத்தைக் கொன்று சாதியத்தை நிலைநாட்ட, ஆணவப்படுகொலையில் ஈடுபட்ட வன்கொடுமையாளர்களைத் தண்டித்திருக்கும் இத்தீர்ப்பு வரலாற்றுச்சிறப்புமிக்கது! ஆணவப்படுகொலையை முற்றாக ஒழித்திட தனிச்சட்டமியற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, கனடா, Canada

28 Apr, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US