வாழ்நாள் முழுவதும் கடன் தொல்லையே இல்லாத சுகமான வாழ்க்கை வேண்டுமா?
உங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அந்த நல்லெண்ணெயில் இரண்டு சிட்டிகை சுக்குப்பொடி போட்டு விடுங்கள்.
கடன் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க ஆன்மீக ரீதியாக சுலபமான பரிகாரங்கள் உண்டு.
நீங்கள் யாருக்கேனும் கடனை கொடுத்துவிட்டு அதை திரும்ப வசூல் செய்ய முடியாமல் நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்திருந்தாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
தற்போது அந்த பரிகாரத்தினை எப்படி செய்யலாம் என பார்ப்போம்.
- நாட்டு மருந்து கடைகளில் சுக்குப்பொடி விற்கின்றது அதை வாங்கி அதில் இருந்து 2 சிட்டிகையை நல்லெண்ணெயில் போட்டு திரி போட்டு குலதெய்வத்தை மனதார நினைத்து கொண்டு இந்த தீபத்தை ஏற்றி விடுங்கள்.
- எப்படியாவது அந்த கடன் தொகையை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று முழுமனதோடு பிரார்த்தனை செய்து கொண்டால் நிச்சயமாக உங்களுடைய கடன் பிரச்சனை படிப்படியாகக் குறையத் தொடங்கும்.
- தொடர்ந்து 48 வாரங்கள் இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் நம்பிக்கையோடு ஏற்றி வாருங்கள். வருடக்கணக்கில் வாராக் கடனாக இருந்த தொகை வசூல் ஆகும்.
எந்த நேரத்தில் ஏற்ற வேண்டும்?
செவ்வாய்க்கிழமை இந்த தீபத்தை உங்களுடைய வீட்டில் ஏற்ற வேண்டும். குறிப்பாக செவ்வாய் கிழமை செவ்வாய் ஹோரை வரும்.
- செவ்வாய்க்கிழமை காலை 6:00-7:00, மதியம் 1:00-2:00, இரவு 8:00-9:00 செவ்வாய் ஹோரை நேரம். இந்த மூன்று மணி நேரத்தில் உங்களால் எந்த நேரத்தில் இந்த தீபத்தை ஏற்ற முடியுமோ அந்த நேரத்தில் ஏற்றலாம்.