கெய்லின் ஸ்டம்பை தெறிக்குவிட்டு மிரள வைத்த ரபாடா! மிகவும் மோசமாக அவுட் ஆகி வெளியேறும் காட்சி
டெல்லி அணிக்கெதிரான போட்டியில், பஞ்சாப் அணி வீரர் கெய்ல் புல் டாஸ் பந்தில் போல்டாகி வெளியேறும் வீடியோ காட்சி இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய 29-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. இப்போட்டியில் டெல்லி அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், குறித்த போட்டியின் 5.2-வது பந்தை டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசினார். அப்போது எதிர்திசையில் அதிரடி மன்னன் கெயில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக ஓடி வந்த கசிகா ரபாடா, ஒரு அதிவேகமான புல் டாஸ் பந்தை வீச, அதை முற்றிலும் எதிர்பார்க்காத கிறிஸ் கெய்ல் போல்டாகி வெளியேறினார். கொஞ்சம் கவனமாக கெய்ல் இருந்திருந்தால், அந்த புல்டாஸ் பந்தை பவுண்டரியோ அல்லது சிக்ஸரோ அடித்திருக்கலாம்.
— Cricsphere (@Cricsphere) May 2, 2021
அதற்கு முந்தைய பந்தை தான் கெயில் லெக் திசையில் சிக்ஸர் பறக்கவிட்டிருந்தார். ஆனால், கெயிலின் அஜாக்கிரதையால், அந்த புல்டாஸ் பந்தால் அவுட் ஆகி வெளியேறினார். இதைக் கண்ட இணையவாசிகள் பலர் மிகவும் மோசமான அவுட் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.