தித்திக்கும் சுவையில் கலத்தப்பம்.., இலகுவாக செய்வது எப்படி?
கலத்தப்பம் என்பது கேரளாவில் பிரபலமாக இருக்கும் ஒரு இனிப்புப் பண்டமாகும்.
கலத்தப்பம் என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் குழந்தைகள் விரும்பி உண்ணும் கலத்தப்பம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- பச்சரிசி- 1 கப்
- சாதம்- ¼ கப்
- தேங்காய் துருவல்- ¼ கப்
- சீரகம்- 1 ஸ்பூன்
- வெல்லம்- 1 கப்
- நெய்- 1 ஸ்பூன்
- தேங்காய் துண்டு- ½ கப்
- உப்பு- 1 சிட்டிகை
- ஏலக்காய் தூள்- ¼ ஸ்பூன்
- பேக்கிங் சோடா- ¼ ஸ்பூன்
- தேங்காய் எண்ணெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் பச்சரிசியை 2 முறை நன்கு கழுவி ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசி, சாதம், தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து சூடானதும் அதில் தேங்காய் துருவலை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் அரைத்த மாவில் வெல்லப்பாகு, வறுத்த தேங்காய் துருவல், ஏலக்காய் தூள், பேக்கிங் சோடா சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக ஒரு வாணலை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி வெந்தவுடன் எடுத்தால் சுவையான கலத்தப்பம் தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |