கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! சிரித்து கொண்டே மாணவ, மாணவிகள் வாழ்வை நாசமாக்கிய லட்சாதிபதி கைது
*கள்ளக்குறிச்சி கலவரத்தில் மாணவ, மாணவிகள் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய லட்சாதிபதி என்பவர் கைது
*வீடியோ காட்சிகள் மூலம் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணத்தின் போது ஏற்பட்ட கலவரத்தில் மாணவ, மாணவிகளின் ஆவணங்களை தீயிட்டு கொளுத்தி அவர்கள் வாழ்க்கையில் கேள்வி குறியை ஏற்படுத்திய லட்சாதிபதி என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ஸ்ரீமதி இறந்த சம்பவத்தையடுத்து அவர் இறப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மாணவி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.
இதனிடையே, முக்கியமான கேள்வி ஒன்று அப்பொழுது முன் வைக்கப்பட்டது. மாணவியின் இறப்பிற்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் எப்படி வன்முறை வெடித்தது. இத்தனை வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்த முடிந்தது என்றால் இது திட்டமிட்ட கலவரமா? என பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதில் மிக முக்கியமாக பள்ளியில் இருந்த மாணவர்களின் ஆவணங்கள் கொளுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு போராடியவர்கள் எப்படி மாணவர்களின் ஆவணங்களை தீயிட்டு கொளுத்துவார்கள் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் ஆவணங்களை தீயிட்டு கொளுத்திய சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த லட்சாதிபதி என்பவரை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வீடியோ ஆதாரத்தின் அடிப்படையிலேயே லட்சாதிபதி பொலிசில் சிக்கியுள்ளார், குறித்த வீடியோவில் சிரித்து கொண்டே மாணவ, மாணவிகளின் சான்றிதழ்களை அவர் தீயிட்டு கொளுத்தியது பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கத்து.