கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் முக்கிய திருப்பம்! 5 பைகளில் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் முக்கிய திருப்பமாக பள்ளி நிர்வாகம் சார்பில் 5 பைகளில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13ஆம் திகதி உயிரிழந்தார். இது தொடர்பாக, பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த மாதம் சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இதையடுத்து மதுரை மற்றும் சேலத்தில் உள்ள காவல் நிலையங்களில் 4 வாரங்களாக கையெழுத்திட்டு வந்தனர். இந்நிலையில், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, தலைவர் சிவசங்கரன், ஆசிரியர் ஹரிபிரியா மற்றும் கீர்த்திகா ஆகிய 5 பேரும் விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் கூடுதல் காவல் துறை கண்காணிப்பாளர் கோமதி முன்னிலையில் நேற்று ஆஜராகினர்.
அப்போது, பள்ளி நிர்வாகம் சார்பில் 5 பைகளில் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவி மரணம் தொடர்பாக 5 பேரிடமும் சிபிசிஐடி பொலிசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் 2வது நாளாக பள்ளி தாளாளர் உட்பட 5 பேர் சிபிசிஐடி முன் ஆஜராகி கையெழுத்து போட்டனர்.