கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் சிறையில் உள்ள பெண் ஆசிரியைக்கு கொலை மிரட்டல்! தந்தை அதிர்ச்சி புகார்
* கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான ஆசிரியை கீர்த்திகாவின் தந்தை நீதிமன்றத்தில் மனு
* சேலம் சிறையில் கொலை மிரட்டல் வருவதாக புகார்
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் சிறையில் உள்ள கணித ஆசிரியை கீர்த்திகாவின் தந்தை நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் கடந்த 13ம் திகதி பள்ளியில் உயிரிழந்து கிடந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி பொலிசார் கைது செய்து கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் ஸ்ரீமதி மரண வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கணித ஆசிரியை கீர்த்திகாவின் தந்தை ஜெயராஜ் விழுப்புரம் மகளிர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆசிரியை கீர்த்திகாவை வேறு சிறைக்கு மாற்ற கோரியுள்ளார். ஏனெனில் தனது மகளுக்கு சேலம் சிறையில் கொலை மிரட்டல் வருவதாக ஜெயராஜ் அதிர்ச்சி தகவலை மனுவில் புகாராக குறிப்பிட்டுள்ளார்.