உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி: நடிகர் கமல்ஹாசன்
தனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கு நன்றி என நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம்
'தக் லைஃப்' படத்தின் விளம்பரத்திற்காக மேடையில் பேசிய நடிகர் கமல்ஹாசன் "தமிழில் இருந்து பிறந்ததே கன்னடம்" என கூறியது சர்ச்சையானது.
கமல்ஹாசன் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கர்நாடக அரசியல் கட்சிகள், அமைப்புகள், கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை, நீதிமன்றம் என்று அனைத்து தரப்பும் கோரின.
ஆனால், தவறாக எதுவும் கூறவில்லை என்று கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
தமிழ்நாட்டிற்கே நன்றி
இதனைத் தொடர்ந்து, கர்நாடக மாநிலம் தவிர்த்து மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் நாளை 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாக உள்ளது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கமல்ஹாசன், "எனக்கு உறுதுணையாக இருந்த தமிழ்நாட்டிற்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது உயிரே.. உறவே..தமிழே.. என்று சொன்ன அர்த்தத்தையும் முழுமையாக உணர்கிறேன்" என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |