அநீதியின் கொடுங்கரங்களில் பேரறிவாளன்.. அற்புதத்தாயின் 30 ஆண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? கமல்ஹாசன் வேதனை
பேரறிவாளனை விடுதலை செய்வது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளன், தற்போது 30 நாட்களுக்கு பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலினும் கடிதம் எழுதியுள்ளார்.
அதேசமயம், பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருப்பதால், இனிவரும் காலங்களில் வயதான எங்களுடன் வாழ தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், மகன் பேரறிவாளனை மீட்க தொடர்ந்து பல ஆண்டுகளாக போராடி வரும் அற்புதம் அம்மாளுக்காக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள்.
மகனை மீட்க உலகின் அத்தனைக் கதவுகளையும் தட்டி விட்டார் அற்புதம் அம்மாள். தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்?
— Kamal Haasan (@ikamalhaasan) June 12, 2021
தன் உயிராற்றலின் ஒவ்வொரு துளியையும் அநீதியின் கொடுங்கரங்களில் சிக்கித் தவிக்கும் பேரறிவாளனின் விடுதலைக்கே செலவழித்த இந்த அற்புதத்தாயின் முப்பதாண்டு கண்ணீரை எப்போது துடைக்கப் போகிறோம்? என கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார்.