கொரோனாவில் இருந்து மீண்ட உடனே பிக்பாஸில் பங்கேற்ற கமல்ஹாசனால் சர்ச்சை! விளக்கம் கேட்கப்படுகிறது
கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார்.
சிகிச்சைக்கு பின்னர் பெருந்தொற்றில் இருந்து அவர் மீண்டார். பின்னர் குணமடைந்த சில நாட்களிலேயே அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்த சில நாட்களிலேயே பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டிருந்தாலும், அதன் பின் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும், ஆனால் தனிமையில் இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றது குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம் என கூறியுள்ளார்.