தேர்தல் தோல்வி எதிரொலி: மக்கள் நீதி மய்யத்திலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்
மக்கள் நீதி மய்யத்திலிருந்து அக்கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ் உட்பட முக்கிய நிர்வாகிகள் விலகினர்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 154 தொகுதிகளில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றிப்பெறவில்லை.
மொத்தம் 2.45 சதவித ஓட்டுக்களை மக்கள் நீதி மய்யம் பெற்றது.
இந்நிலையில், தேர்தல் தோல்வி எதிரொலியால் மக்கள் நீதி மய்யத்தின் துணை தலைவர் மகேந்திரன் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
துணை தலைவர் பொன்ராஜ், பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மவுரியா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
பொதுச்செயலாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.
— Sonia Arunkumar (@rajakumaari) May 6, 2021
இந்நிலையில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கொடுத்த கடிதங்களை தலைவர் கமல்ஹாசன் விரைவில் பரிசீலனை செய்வார் என மக்கள் நீதி மய்யம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.