நடிகர் நாசரின் மனைவி மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நீக்கம்! தேர்தல் முடிவு விரைவில் வரவுள்ள நிலையில் கமல் அதிரடி
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி கடந்த 2018 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து, அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக நடிகர் நாசரின் மனைவி கமீலா நாசர் செயல்பட்டு வந்தார்.
அவர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மத்திய சென்னை மக்கள் நீதி மய்யம் வேட்பாளராகவும் களமிறங்கி தோல்வியடைந்தார்.
இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சியின் சென்னை மண்டலத்தின்(கட்டமைப்பு) மாநிலச் செயலாளராக இருந்து வந்த கமீலா நாசர் திடீரென கட்சியில் இருந்து விலகினார்.
இந்நிலையில் அவர் தனிப்பட்ட காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் கமீலா நாசரை விடுவிப்பதாக மநீம கட்சியின் பொதுச் செயலாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஒப்புதலுடன் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, தேர்தல் முடிவுகள் வரவுள்ள நிலையில் கட்சியின் முக்கிய நபர் நீக்கப்பட்டிருப்பது மக்கள் நீதி மய்ய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.