கண் திருஷ்டிகள் அகன்று தடைபட்டுக் கொண்டிருக்கும் காரியங்கள் நிறைவேற வேண்டுமா?
துர்சிந்தனைகளின், கெட்ட எண்ணங்களின் தாக்குதல்தான் கண் திருஷ்டி எனப்படுகின்றது. நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டியோ தோஷங்களோ ஏற்பட்டுள்ளதா என்பதை பல நிகழ்வுகள் மூலமும் சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகங்கள், சண்டை சச்சரவுகள், பிரிவுகள், நஷ்டம், பொருள் இழப்பு என ஏதேனும் ஒன்று வரிசையாக வந்துகொண்டே இருக்கும்.
இதிலிருந்து விடுபட வேண்டுமாயின் ஒரு சில எளிய பரிகாரங்களை செய்தாலே போதும். அதில் ஒரு எளிய பரிகாரம் ஒன்றை இங்கே பார்ப்போம்.
- ஊமத்தம்செடியயும் சிவபெருமானுக்கு உகந்த இலை ஆகும். இந்த ஊமத்தங்காய் வைத்து சிவ பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதன் மூலம் நமது பிரச்சனைகளில் இருந்து எளிதாக விடுபட முடியும்.
- முதலில் இரண்டு ஊமத்தங்காய் களை எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றின் மீது முட்கள் இருப்பதால் மிகவும் கவனமாக கையாளவேண்டும். ஊமத்தங்காயின் காம்புப் பகுதிகளை வெட்டிகொண்டு கத்தியை பயன்படுத்தி ஊமத்தங்காயின் உள்ளே இருக்கும் விதைப் பகுதியை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும்.
- பின்னர் இரண்டு அகல்விளக்குகள் மற்றும் விளக்கு வைப்பதற்கான இரண்டு தட்டுகளை எடுத்து சுத்தம் செய்து அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டு தட்டின் மீதும் ஒவ்வொரு அகல் விளக்கை வைத்துக் கொள்ள வேண்டும்.
- அதன்பிறகு எப்போதும் பூஜை செய்வதற்கு வைப்பது போன்ற வெத்தலை பாக்கு பழம் போன்றவற்றை வைத்து விட்டு இரண்டு விளக்குகளையும் ஏற்றி சிவபெருமானை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். எனக்கு இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து இன்பமான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும்.
- இந்த பூஜையை வெள்ளிக்கிழமை அன்று தொடங்கினால் தொடர்ந்து ஒன்பது வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும்.
நன்மை
- ஊமத்தங்காயின் மீது எவ்வாறு முட்கள் இருக்கிறதோ அதுபோல நமது வாழ்க்கையில் இருக்கும் முட்கள் போன்ற பிரச்சனைகளைத் அவை தீர்த்து வைக்கின்றன.
- இந்த பூஜையை நாம் தொடர்ந்து செய்து வருவதால் நம்மீது இருக்கும் கண் திருஷ்டிகள் அகன்றுவிடும்.
- தீராத துயரங்கள் தீர்ந்து விடும். பணம் நகை நம்மிடம் பெருகி வரும்.
- தொழிலில் முன்னேற்றம் இருக்கும். கடன் பிரச்சினைகள் தீரும்.
- உறவினர்களிடையே பகைமை இருந்தால் அவையும் மறைந்துவிடும்.
- நோய்வாய் உள்ளவர்கள் குணமடையவும் இந்த தீபத்தை ஏற்றுவதன் மூலம் நல்ல பலனை பெற முடியும்.