ஈழத்தமிழ் அரசியலை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது- பிரபல தொழில் அதிபர் கடும் ஆவேசம்!!

Sonnalum Kuttram
By Independent Writer Apr 17, 2023 05:27 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report

எனக்கு அரசியலுக்கு வர வேண்டிய தேவையும் இல்லை. அது எனது நோக்கமும் இல்லை. ஆனால் இங்கு இருக்கக்கூடிய அரசியலை பார்க்கும் போது மிகவும் கவலையாக உள்ளது என ஐபிசி தமிழ் குழுமத்தின் தலைவரும், பிரபல தொழிலதிபருமான கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

எமது ஊடகத்தின் சக்கர வியூகம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போது மேற்கண்டவாறு கூறிய அவர், சரியான பாதையிலே பயணிக்க கூடிய, இந்த மண்ணையும் மக்களையும் நேசிக்க கூடிய ஒரு இளைய சமுதாய கட்டமைப்பு உருவாக வேண்டும். அதிலிருந்தே அடுத்த அரசியலை முன்னகர்த்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் கருத்துக்களை பகிர்ந்த அவர், “ எமது இனத்தை வழிநடத்தக் கூடிய தலைமைகள் இன்று இந்த மண்ணில் இல்லை. குறிப்பாகச் சொன்னால் 2009 ஆம் ஆண்டு வரை ஒரு பெயருக்காக ஒரு இனம் நேர்கோட்டில், நிதானமாக, கட்டுகோப்புடன் பயணித்தது.

ஆனால் 2009 இற்கு பின்னர், இது பலகோணங்களில் சிதறுண்டு போயிருக்கிறது. இதை ஒரு வரையறைக்குள் வைத்து வழிநடத்தக் கூடியது அரசியலாக தான் இருக்க முடியும். வேறு எதனாலும் இதை வழிநடத்த முடியாது. ஆனால் அதனை வழிநடத்தக்கூடிய அரசியல் தலைவர்கள் இங்கு இல்லை.

இன்று இருக்க கூடிய அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பது என்பது சாத்தியமானது. ஆனால், அத்தனை அரசியல் கட்சிளைச் சார்ந்தவர்களும் தாம் தலைவர்களாக இருக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

இங்கே பத்து பேர் தலைவர்களாக இருந்து கொண்டு நிர்வாகத்தை நடத்த முடியாது. தலைவன் என்பவன் தனித்துவமானவனாக, ஒருவனாக இருக்க வேண்டும். அவனோடு சேர்ந்து பயணிக்கக் கூடியவர்கள் சரியாக இருப்பார்களேயானால் ஒரு சரியான அரசியல் கட்சியை உருவாக்க முடியும்.

ஆனால் தற்போது இருக்கின்ற அரசியல் கட்சிகளை வைத்துக்கொண்டு, அப்படி ஒரு கூட்டு முயற்சி எடுத்து ஒருவரை தலைவராகக் கொண்டு வந்து அரசியலை முன்னகர்த்துவதற்கான சாத்தியங்கள் கிடையவே கிடையாது” என அவர் கூறியுள்ளார்.

சக்கர வியூகம் நிகழ்ச்சியின் முழுமையான பகுதி காணொளி வடிவில்,


2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US