இருமாப்புடன் சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்- விஜய்க்கு கனிமொழி பதிலடி
திமுக அரசு குறித்து பேசிய விஜயின் கருத்துக்கு திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
கனிமொழி கூறியதாவது..,
சென்னையில் நேற்று நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய், மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.
தொடர்ந்து அதில் பேசிய விஜய் "திமுக அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டில் சமத்துவத்துக்காக மாநில அரசு ஒரு துரும்பையும் எடுத்துப்போடவில்லை என்று, வேங்கைவயலில் மேல்நிலை குடிநீர்த் தொட்டியில் மனித கழிவு கலந்ததை சுட்டிக்காட்டி பேசினார்.
சம்பிரதாயத்துக்கு ட்வீட் செய்வதும், அறிக்கை வெளியிடுவதும், மழைநீரில் இறங்கி புகைப்படம் எடுப்பதிலும் தனக்கு உடன்பாடு இல்லை என்றார்.
மேலும் கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி, இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தாள முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் கணக்குகளை மக்களே மைனசாக்கி விடுவார்கள்" என தெரிவித்தார்.
விஜயின் இந்த கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது பதில்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், திருச்செந்தூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, "தேர்தல் வெற்றி உங்கள் கைகளில் இருக்கிறது, என்று பணியாற்றினால், இருமாப்போடு சொல்கிறேன் 200 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |