இந்தப் படத்தை ட்ரோல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்- எச்சரிக்கும் படக்குழுவினர்
கண்ணப்பர் படத்தை ட்ரோல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள் என அப்படத்தின் படக்குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் கண்ணப்பா.
மோகன்பாபு, சரத்குமார், கருணாஸ், பிரீத்தி முகுந்தன், ரகு பாபு உள்ளிட்ட ஏராளமானோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
மோகன்லால், அக்ஷய்குமார், பிரபாஸ் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்டீஃபன் தேவஸி இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 25ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்தப் படத்தின் டீசர் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் புரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
If anyone Trolls #Kannappa movie, Lord Shiva will KannaKuthum !!
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 24, 2025
Adei😀
pic.twitter.com/5cIYpUTruB
படத்தின் சில ட்ரோல் மீம்கள் தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த நடிகர் ரகு பாபு, இந்தப் படத்தை யார் ட்ரோல் செய்தாலும், அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், கடவுள் சிவனின் கோபத்திற்கு ஆளாவார்.
மேலும், இது 100 சதவீதம் உண்மை. அது யாராக இருந்தாலும் அவர் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார்.
அவரின் இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |