திருநங்கை வீராங்கனை கிரிக்கெட் விளையாட அனுமதி - தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் கடும் எதிர்ப்பு
Kapp slams trans cricketer Anaya Bangar inclusion: திருநங்கையாக மாறிய அனயா பங்கர் கிரிக்கெட்டில் பங்குபெற கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மரிசான் காப் கடும் எதிர்ப்பு
அவுஸ்திரேலியாவில் டிரான்ஸ் கிரிக்கெட் வீராங்கனை அனயா பங்கர் சமூக கிரிக்கெட்டில் விளையாட அனுமதி பெற்றிருப்பது, தென்னாப்பிரிக்க ஆல் ரவுண்டர் மரிசான் காப் (Marizanne Kapp) கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

36 வயதான காப், “இது முற்றிலும் அபத்தமானது. அனுமதி வழங்கப்படக்கூடாது” என்று தனது Instagram-ல் பதிவு செய்து, Women’s Big Bash League (WBBL)-ஐ குறித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் விளையாட அனுமதி
அனயா பங்கர், இந்த ஆண்டு பாலின மாற்ற அறுவை சிகிச்சை செய்துள்ளார். இந்தியாவில் BCCI-க்கு விண்ணப்பித்தபோதும் பதில் கிடைக்காததால், அவர் Cricket Australia-வை அணுகினார்.
Cricket Australia Integrity Head ஜாக்கி பார்ட்ரிட்ஜ், “மார்ச் 2027 வரை சமூக கிரிக்கெட்டில் (Premier Cricket) விளையாடலாம். ஆனால் Elite Cricket-இல் விளையாட, testosterone அளவு 10 nmol/L-க்கு குறைவாக இருக்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளார்.
அனயா பங்கர், “நான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்தது, இது மிகப்பெரிய நாள். ஒருகட்டத்தில் நான் கிரிக்கெட்டில் திரும்ப முடியாது என்று நினைத்தேன். Cricket Australia எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்துள்ளது” என்று தெரிவித்தார்.
அனயா, இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் பங்கரின் மகள் ஆவார். அவர் சிறுவயதில் சர்பராஸ் கான் மற்றும் முஷீர் கானுடன் இள வயது பிரிவு போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ICC அனுமதிக்கவில்லை
BCCI அதிகாரிகள், “ICC இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்தியாவில் இது இதுபோன்ற முதல் வழக்கு என்பதால், இன்னும் தீர்மானிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம், பெண்கள் கிரிக்கெட்டில் டிரான்ஸ் வீரர்கள் பங்கேற்பு குறித்த சர்ச்சையை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கள் வெளிப்படுகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |