உன்னிடம் 10 ரூபாய் இருக்கா? விவசாயியை அவமானப்படுத்திய ஊழியர்- அடுத்து நடந்த தரமான சம்பவம்
இந்தியாவில் விவசாயி ஒருவர் கார் ஷோரூமுக்கு சென்ற நிலையில் ஊழியர்கள் அவரை அவமானப்படுத்திய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமனபாளையா கிராமத்தை சேர்ந்தவர் கெம்பே கவுடா. இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவர் அழுக்கு சட்டையுடன் துமகூரு நகரில் உள்ள கார் ஷோரூமுக்கு சரக்கு வாகனம் வாங்க சென்றுள்ளார்.
அப்போது அங்கிருந்த பணியாளர்கள் சிரித்தபடி உங்களிடம் 10 ரூபாய் உள்ளதா? என்று நக்கலாக கேட்டுள்ளனர். நான் சரக்கு வாகனம் வாங்க வந்திருக்கிறேன் என்று கெம்பே கவுடா கூறவே ஷோரூம் ஊழியர்கள் அவரை கிண்டலிடித்து அவமானப்படுத்தியுள்ளனர்.
அதோடு அரை மணிநேரத்தில் ரூ.10 லட்சம் கொண்டு வந்தால் சரக்கு வாகனம் தருகிறோம் என்று அலட்சியமாக கூறியுள்ளனர். இதையடுத்து தனது கிராமத்தில் உள்ள மாமாவை தொடர்பு கொண்டு பணத்தை கொண்டு வர சொல்லியுள்ளார்.
அவரும் பணத்தை எடுத்து வந்த நிலையில் ஷோ ஊழியர்கள் முன்னிலையில் பணத்தை கொட்டியுள்ளார். இதனைக்கண்டு வாயடைத்து போன ஊழியர்கள் பல காரணம் கூறி சரக்கு வாகனத்தை டெலிவரி செய்ய 2 நாட்கள் ஆகும் என்று தட்டிக்கழித்துள்ளனர்.
இதனால் கோபம் அடைந்த கெம்பே கவுடா ஷோ ரூம் முன்னிலையில் போராட்டம் செய்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் அதிகாரிகள் கெம்பே கவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
Dear @anandmahindra Sir,
— Akshay G Bhat (@AkshayGBhat1) January 23, 2022
This is how your exicutive judge People ? this incidnt happend at Tumakuru Karnataka, A farmer went to Mahindra Showroom where Mahindra executives disrespected this guy, What action would you take on your exicutives?@MahindraRise pic.twitter.com/6zlcHFFThf
பின்னர் கிண்டலடிக்த ஊழியர்கள் அனைவரும் கெம்பே கவுடாவிடம் மன்னிப்பு கேட்டனர். இந்நிலையில் ஷோரூமில் நடந்த சம்பவத்தை பற்றி கெம்பே கவுடா வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.