இனி அலுவலகங்களில் வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்வு- அரசின் புதிய உத்தரவு
கர்நாடக அரசு தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.
வேலை நேரம் உயர்வு
கர்நாடக கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் 1961ல் திருத்தம் கொண்டு வர அம்மாநில திட்டமிட்டுள்ளது.
அதன்படி, தினசரி வேலை நேரம் 9 மணி நேரத்தில் இருந்து 10 மணி நேரமாக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூடுதல் நேர பணியையும் ஒரு மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய வேலை நேரத் திட்டம் அலுவலகங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பொருந்தும் என கர்நாடக மாநில அரசு தெரிவித்துள்ளது.
அண்மையில் ஆந்திர மாநிலத்தில் தொழிலாளர்களை 10 மணி நேரம் வேலை வாங்கும் வகையில் தொழிலாளர்கள் நல சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து தற்போது கர்நாடக அரசும் வேலை நேரத்தை உயர்த்துவதற்காக திட்டமிட்டுள்ளது.
மேலும் தொழிற்சங்கங்கள், கர்நாடக அரசு பணி நேரத்தை நீட்டிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |