காதலருடன் திருமணமான 20 வயது இளம்பெண்: வெடி மருந்தை வாயில் திணித்து.,கொடூர மரணம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 20 வயது இளம்பெண் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இளம்பெண்
கர்நாடகாவின் ஹுன்சூர் தாலுகாவைச் சேர்ந்த 20 வயது இளம்பெண் ரக்ஷிதா.
இவருக்கும் கேரளாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால், ரக்ஷிதா தனது உறவுக்கார நபர் சித்தராஜுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மைசூரு மாவட்டத்தில் உள்ள ஹொட்டல் ஒன்றில் ரக்ஷிதாவும், சித்தராஜுவும் தங்கியுள்ளனர்.
அங்கு அவர்களுக்குள் சண்டை ஏற்பட, ரக்ஷிதா வெடிப்பு ஏற்பட்டு முகம் சிதைந்து உயிரிழந்துள்ளார். இதனையடுத்து தப்பியோட ஓட முயன்ற சித்தராஜுவை உள்ளூர்வாசிகள் மடக்கிப்பிடித்துள்ளனர்.
வாயில் திணித்து
அப்போது அவர் செல்போன் வெடித்ததால் ரக்ஷிதா உயிரிழந்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் உண்மை தெரிய வந்தது.
சித்தராஜு ஒரு ரசாயனப் போடி கலவையைப் பயன்படுத்தி அதனை ரக்ஷிதாவின் வாயில் திணித்து வெடிக்க செய்துள்ளார். இதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |