பிரபல மடாதிபதி தற்கொலையில் திருப்பம்! பெண்ணுடன் வீடியோ அழைப்பு... பகீர் தகவல்
கர்நாடக மடத்தில் தற்கொலை செய்த மடாதிபதி பசவலிங்க சுவாமி.
அவர் தற்கொலை தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்.
இந்தியாவில் மடாதிபதி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர் வீடியோ அழைப்பில் பேசியதை வைத்து மிரட்டப்பட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் ராமநகர் மாவட்டத்தில் 400 ஆண்டு பழமையான காஞ்சுக்கல் மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக பசவலிங்க சுவாமி (45) இருந்தார். இந்நிலையில் தீபாவளி தினத்தன்று காலை 6 மணியாகியும் மடத்தில் உள்ள பூஜை அறை திறக்கப்படவில்லை.
தினமும் காலை 4 மணி முதல் பசவலிங்க சுவாமி வழக்கமாக அந்த அறையில் பூஜை செய்வார். இதனால் சந்தேகமடைந்த மடத்தில் இருந்தவர்கள் உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்த அறையை ஜன்னல் வழியாக பார்த்த போது கிரீல் கம்பியில் தூக்குப்போட்டு பசவலிங்க சுவாமி தூக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
அவர் தற்கொலைக்கு முன்னர் எழுதி வைத்திருந்த கடிதத்தில், மடாதிபதி பொறுப்பில் இருந்து சிலர் என்னை விலக்க நினைக்கிறார்கள். இதற்காக எனது புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தவறான செய்திகளை பரப்ப நினைத்து மிரட்டினர் என எழுதியிருந்தார்.
இருப்பினும் அவரது தற்கொலை தொடர்பாக கடிதத்தில் இருந்த முக்கிய விஷயங்களை வெளியிட பொலிஸார் மறுத்துவிட்டனர். இது தொடர்பாக தற்போது பொலிஸார் வெளியிட்ட திடுக்கிடும் தகவலின்படி, பசவலிங்க சுவாமி ஒரு பெண் மடாதிபதியுடன் நெருக்கமாக பழகியுள்ளார்.
மடாதிபதி-பெண் இருவரும் ஆடைகள் இன்றி வீடியோ அழைப்பில் பேசியுள்ளனர். இதனை அந்த பெண் தனது செல்போனில் ஸ்கீரின் ரெக்கார்ட் மூலம் பதிவு செய்து கொண்டார்.
இந்த வீடியோவை கொண்டு ஒரு கும்பல் மிரட்டியுள்ளது. இதனால் வேறு வழியின்றி மடாதிபதி தற்கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக மடாதிபதி தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மிரட்டலில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளது எனவும் அதன்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.