கருப்பாக இருப்பதாக கிண்டல் செய்த கணவரின் குடும்பம்: புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு..சிக்கிய கடிதம்
இந்திய மாநிலம் கர்நாடகாவில் திருமணமான 4 மாதங்களில் புதுப்பெண் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புதுப்பெண் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம் சரண பசவேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் அமரேஷ் (30). இவருக்கும் பூஜா (27) என்ற பெண்ணும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பூஜா தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து பூஜாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் பொலிஸார் நடத்திய விசாரணையில் பூஜா எழுதிய கடிதம் கிடைத்தது. அதில் தனது கணவரின் தாய் சசிகலா, தந்தை தேவேகவுடா மற்றும் சகோதரர் வீரண்ண கவுடா ஆகியோர் தனது நிறத்தை கூறி கேலி செய்தனர். இதனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் முடிவை தேடிக் கொள்கிறேன் என கூறப்பட்டிருந்தது.
கொலை என புகார்
ஆனால் பூஜாவின் பெற்றோர் இதனை மறுத்துள்ளனர். மேலும், தனது மகளை அவர்கள் அனைவரும் சேர்ந்து கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர் என குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |