முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் ஆடுவது சந்தேகம் - காரணம் இதுதான்
இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் ஆடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை
இந்தியா மற்றும் இங்கிலாந்திற்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பையின் முதல் டெஸ்ட் போட்டி நாளை இங்கிலாந்தில் தொடங்க உள்ளது.
விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் இல்லாமல், சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்குகிறது.
கடைசியாக 2017 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் ஆடிய கருண் நாயருக்கு, தற்போது 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்த தொடரின் மூலம் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கருண் நாயர் காயம்
இந்த நிலையில், முதல் டெஸ்ட்டில் கருண் நாயர் விளையாடுவது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
டெஸ்ட் போட்டிக்காக வலைப்பயிற்சியில் ஈடுபட்ட போது, பிரசித் கிருஷ்ணா வீசிய பந்து, அவரது விலா எலும்பில் பட்டு காயமடைந்துள்ளார். இதன்பிறகு கருண் நாயர் வலைப்பயிற்சியில் ஈடுபடவில்லை.
இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள கருண் நாயர், 2016 ஆம் ஆண்டில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முச்சதம்(303) அடித்ததன் மூலம், முச்சதம் அடித்த 2வது இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
விஜய் ஹசாரே டிராபி தொடரில் தொடர்ச்சியாக 5 சதங்கள், ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான சிறப்பான ஆட்டம் மூலம் அணியில் இடம் பிடித்த அவருக்கு இந்த காயம் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |