உடல் எலும்பை வலுவாக்க உதவும் உளுந்து சட்னி.., எப்படி செய்வது?
கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும்.
அந்தவகையில், கருப்பு உளுந்தை பயன்படுத்தி இட்லி, தோசைக்கு அருமையாக இருக்கும் சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கருப்பு உளுந்து- 3 ஸ்பூன்
- பூண்டு- 6 பல்
- தக்காளி- 2
- காய்ந்த மிளகாய்- 5
- வெல்லம்- ½ ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கருப்பு உளுந்து, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
பின் அதில் நறுக்கிய தக்காளி, காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் அதில் வெல்லம் சேர்த்து வதக்கவும்.
அடுத்து இதனை நன்கு ஆறவைத்து உப்பு சேர்த்தது மிக்ஸி ஜாரில் நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இதற்கடுத்து ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சேர்த்தால் சுவையான கருப்பு உளுந்து சட்னி தயார்.
இந்த கருப்பு உளுந்து சட்னி உடலிற்கு ஆரோக்கியத்தையும், எலும்பிற்கு வலுவையும் அளிக்கும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |