தித்திக்கும் சுவையில் காசி அல்வா.., இலகுவாக செய்வது எப்படி?
அல்வா என்றாலே வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பிடித்தமான ஒரு இனிப்பு.
அந்தவகையில், தித்திக்கும் சுவையில் காசி அல்வா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வெண் பூசணி- 1
- நெய்- 3 ஸ்பூன்
- முந்திரி- 10
- சர்க்கரை- 1 கப்
- குங்குமப்பூ- 3 இதழ்
செய்முறை
முதலில் சிறிதளவு பாலில் குங்குமப்பூ சேர்த்து ஊறவைத்துக்கொள்ளவும்.
பின் வெண் பூசணியை நன்கு துருவி பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் நெய் சேர்த்து முந்திரி பருப்பை சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

இதற்கடுத்து அதே நெய்யில் துருவிய வெண் பூசணியை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
பின்னர் இதில்பூசணியை பிழிந்து எடுத்த தண்ணீரை அரை கப் சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.
இதனைத்தொடர்ந்து இதில் சர்க்கரை சேர்த்து வதக்கி குங்குமப்பூ பால் சேர்த்து கிளறிக்கொள்ளவும்.
இதில் அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி கெட்டியாக வந்ததும் வறுத்த முந்திரி சேர்த்தால் சுவையான காசி அல்வா தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |