இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியிலிருந்து இலங்கை பந்து வீச்சாளர் விலகல்! வெளியான காரணம்
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலிருந்து இலங்கை பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா விலகியுள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரிலும் விளையாடி வருகிறது.
2-0 என இந்திய அணி ஒரு நாள் தொடரை கைப்பற்றிய நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி மற்றும் 3வது ஒரு நாள் போட்டி நாளை கொழும்பு மைதானத்தில் நடைபெறுவிருக்கிறது.
3வது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிப்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில், காயம் காரணமாக இந்நியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியிலிருந்து இலங்கை பந்து வீச்சாளர் கசுன் ரஜிதா விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் களமிறங்கிய கசும் ரஜிதா 7.1 ஓவர் வீசி 53 ஓட்டங்கள் கொடுத்த 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
இந்தியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இலங்கையில் இரண்டு மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.