குடும்ப உறுப்பினர்களிடம் இருந்தே மறைக்கப்படும் கேட் மிடில்டனின் நிலை... அரண்மனை ஊழியர்களுக்கும் தடை
வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கே அவரது தற்போதைய நிலை குறித்து மறைக்கப்படுவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக
குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, இளவரசி கேட் மிடில்டனின் மூத்த அரண்மனை ஊழியர்களுக்கும் அவரது நிலை தொடர்பில் எந்த தகவலும் இல்லை என்பதுடன், தொடர்பு கொள்ளவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
@pa
ஆனால் கென்சிங்டன் அரண்மனை வெளியிட்டுள்ள தகவலில், பிரித்தானியாவின் வருங்கால ராணியார் தற்போது அடிலெய்ட் மாளிகையில் தங்கி குணமடைந்து வருகிறார் என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இது அரச குடும்பத்து ஆதரவாளர்களுக்கு போதுமானதாக இல்லை. பொதுமக்களில் பலர் தங்கள் கவலையை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில், கேட் மிடில்டனின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி, சர்வதேச ஊடகங்களில் விவாதப் பொருளானது.
வெளியே கசிய வாய்ப்பில்லை
மேலும், கேட் மிடில்டனின் மூத்த அரண்மனை ஊழியர்களுக்கே, அவரது அறுவை சிகிச்சை முடிந்த பின்னரே தகவல் தெரிய வந்ததாகவும் கூறப்படுகிறது. அரண்மனையில் மிக சிலரே கேட் மிடில்டன் நிலை குறித்து அறிந்திருக்கிறார்கள் என்றும், அவர்களிடம் இருந்து ஒரு வார்த்தை கூட வெளியே கசிய வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது.
@pa
தற்போது கேட் மிடில்டன் தங்கியிருக்கும் அடிலெய்ட் மாளிகையில் சார்லஸ் மன்னருக்கும் ராணியாருக்கும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட வேறு எவரும் கேட் மிடில்டனை சந்திக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
இப்படியான தகவல்கள், உண்மையில் கேட் மிடில்டனுக்கு என்ன ஆனது என்பதை விட, ஏன் ரகசியம் காக்கிறார்கள் என்ற குழப்பமே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |