பிரித்தானியாவின் நினைவேந்தல் விழா: poppies-களுடன் இளவரசி கேட் மிடில்டன் சிறப்பு தோற்றம்!
பிரித்தானியாவின் மன்னர் சார்லஸ், வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் மூவரும் அரச குடும்பத்தில் நினைவு விழாவில் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தை கவுரவித்தனர்.
நினைவு விழா
பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவுக்கு பிறகு நடைபெறும் நினைவு விழாவில் மன்னர் மூன்றாம் சார்லஸ், குயின் கான்சார்ட் கமிலா, வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் மிடில்டன் ஆகியோர் கலந்து கொண்டு ராணி எலிசபெத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் இளவரசி கேட் மிடில்டன், இளவரசர் வில்லியம் மற்றும் மன்னர் சார்லஸுடன் இணைந்து மூன்று பாப்பிகளை(பூக்கள்) தனது ஆடையுடன் அணிந்து வந்தார்.
Getty Image
மேலும் ஆயுதப்படைகளான வருடாந்திர ராயல் பிரிட்டிஷ் லெஜியன் சேவையின் விழாவிலும் கௌரவ விருந்தினர்களாக மூவரும் கலந்து கொண்டனர்.
மறைந்த ராணிக்கு சிறப்பு அஞ்சலி
விழாவில் மறைந்த மகா ராணி இரண்டாம் எலிசபெத்தின் மாட்சிமை-க்கு சிறப்பு அஞ்சலி செலுத்தும் வகையில், படையின் முக்கிய உறுப்பினர்களிடம் இருந்து ராணியை குறித்த நகரும் செய்தி தொகுப்புகள் விவரிக்கப்பட்டன.
RAF நேவிகேட்டர் ஜான் நிகோலின் அஞ்சலி குறிப்பில், இந்த படை சேவை பிரிவு மகாராணியாரால் உருவாக்கப்பட்டது என தெரிவித்தார்.
Getty/RBL
பிபிசியின் ஹூ எட்வர்ட்ஸ் வழங்கிய குறிப்பில், சேவை மற்றும் கடமை ஆகியவை இராணுவ வாழ்க்கையின் மையத்தில் உள்ளன, இதனை மறைந்த மாட்சிமை ராணி II எலிசபெத்தை விட வேறு எந்த நபரும் அந்த வார்த்தைகளை முழுமையாக அடையாளப்படுத்தவில்லை என குறிப்பிட்டார்.
அத்துடன் விழாவில், போரில் அன்புக்குரியவர்களை இழந்த 21 குடும்பங்கள் மேடையில் ஊர்வலம் செல்வதை மன்னர் சார்லஸ், ராணி கன்சார்ட் கமிலா, வில்லியம் மற்றும் கேட் ஆகியோர் பார்வையிட்டனர்.
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளித்த இராணுவ வீரர்களின் சேவையும் நன்றி தெரிவித்தது. மேலும் ஃபாக்லாந்து போரின் 40வது ஆண்டு விழா இசையுடன் நினைவுகூரப்பட்டது.
Shutterstock