விரைவில் இணையும் வில்லியம் ஹரி: சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்போவது இவர்தான்
இளவரசர் ஹரி, அமெரிக்கப்பெண்ணான மேகனை திருமணம் செய்ததைத் தொடர்ந்து ராஜ குடும்பத்தின் உருவான குழப்பங்கள், அவரும் அவரது மனைவியும் ராஜ குடும்பத்தைவிட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேற காரணமாக அமைந்தன.
ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறியபின், கொஞ்சம் கூட மரபுகளை மதிக்காமல் ராஜ குடும்பத்தை விமர்சித்த தன் மனைவி மேகன் சொன்னதற்கெல்லாம் ஹரியும் தலையாட்டினார்.
குறிப்பாக, தன் அண்ணன் வில்லியம் மற்றும் அவரது மனைவியான கேட் ஆகியோர் மீது ஹரியும் மேகனும் முன்வைத்த குற்றச்சாட்டுகள், இருதரப்புக்கும் இடையே பெரும் பிளவை உண்டாக்கின.
வில்லியம் ஹரிக்கிடையே சமாதான பேச்சுவார்த்தை
இருந்தாலும், எப்படியாவது அண்ணனும் தம்பியும் மீண்டும் இணைந்துவிடமாட்டார்களா என இன்னமும் ஆசைப்படும் ராஜ குடும்ப ரசிகர்களும் நலம் விரும்பிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அதுவும், இளவரசி கேட்டுக்கு புற்றுநோய் என தெரியவந்த நிலையில், ஒரு காலத்தில் அக்கா தம்பி போல அன்புடன் பழகி வந்த ஹரியும் கேட்டும் முன்போல் மாறிவிடமாட்டார்களா என ஏங்கும் ரசிகர்கள் இன்னமும் இருக்கிறார்கள்.
இதற்கிடையில், தன் பிள்ளைகள் மீண்டும் ஒன்று சேரவேண்டும் என்ற ஆசை மன்னர் சார்லசுக்கு இருப்பதை மறுப்பதற்கில்லை.
அதை நிரூபிப்பதுபோல ஒரு செய்தி தற்போது வெளியாகியுள்ளது. ஆம், இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரிக்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த மன்னர் சார்லஸ் விரும்புவதாக மன்னருடன் நெருக்கமாக பணியாற்றிய ஒருவர் தெரிவித்துள்ளார்.
விரைவில் சகோதரர்கள் இணையக்கூடும்
மன்னர் சார்லசுடன் நெருக்கமாக பணியாற்றியவரும், முன்னாள் பட்லருமான கிராண்ட் ஹரோல்ட் (Grant Harrold) என்பவர், இந்த ஆண்டே இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் இணையக்கூடும் என்ற செய்தியைக் கூறியுள்ளார்.
இளவரசர் ஹரி, அடுத்த மாதம், அதாவது, மே மாதம் 8ஆம் திகதி, இன்விக்டஸ் விளையாட்டுப்போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றிற்காக பிரித்தானியா வருகிறார்.
அப்போது ஹரியும் வில்லியமும் சந்தித்துக்கொள்ள அதிக வாய்ப்புள்ளது என்று கூறும் ஹரோல்ட், அப்போது என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறார். தன் பிள்ளைகள் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைக் களைந்து ஒன்றுசேரவேண்டும் என மன்னர் சார்லஸ் விரும்புகிறார் என்று கூறும் ஹரோல்ட், ஆகவே, அவர் ஹரி வில்லியமுக்கிடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்புள்ளது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |