மிக விரைவில் வருகிறேன்... இளவரசி கேட் வெளியிட்ட கடிதம் கூறும் செய்தி
பிரித்தானியாவின் வருங்கால ராணியான இளவரசி கேட் சமீபத்தில் தன் கட்டுப்பாட்டின் கீழிருக்கும் ஐரிஷ் பாதுகாவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்த விடயம் அனைவரும் அறிந்ததே.
அதில் அவர், தன்னால் Trooping the Colour ஒத்திகை நிகழ்ச்சியில் தன்னால் கலந்துகொள்ள இயலாதததற்காக ஐரிஷ் பாதுகாவலர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்நிலையில், அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் மீது பிரித்தானிய ஊடகங்கள் கவனம் செலுத்திவருகின்றன.
சீக்கிரம் வருகிறேன்...
அந்தக் கடிதத்தில், இளவரசி கேட், ‘மீண்டும் உங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக மிக விரைவில் உங்களை சந்திக்க இயலும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த விடயத்தை முக்கியத்துவப்படுத்தும் ஊடகங்கள், அது கேட் வெளிப்படுத்தியுள்ள நேர்மறையான கருத்து என குறிப்பிட்டுள்ளன. அதாவது, சீக்கிரமாகவே அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நிலை ஏற்படலாம் என்பதையே அவர் வெளியிட்டுள்ள கடிதம் காட்டுவதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |